உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முருகன்  கோயில்களில் வழிபாடு

முருகன்  கோயில்களில் வழிபாடு

ராமநாதபுரம்; சஷ்டியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. நேற்று ஆடி மாதம் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு ராமநாத புரம் அருகே குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் செய்து அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில், முகவை ஊருணி பாலசுப்பிரமணியசுவாமி கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டயுத சுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. கந்தசஷ்டி பாராயணம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராள மானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !