உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில் இயற்கை வேளாண் சாகுபடி முறையை பின்பற்றும் விவசாயிகள் நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பயிர் சாகுபடியில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்து உயிரியல் சுழற்சி, இயற்கை எரு பயன்படுத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஒரு ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். பரிசு ரூ.2 லட்சம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், 'அக்ரிஸ் நெட்' வலை தளத்தில் நாளைக்குள் பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மண்டபம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் செல்வம் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை