உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராணிப்பேட்டை / ரயிலில் தவறி விழுந்த சென்னை பயணியின் கை துண்டிப்பு

ரயிலில் தவறி விழுந்த சென்னை பயணியின் கை துண்டிப்பு

அரக்கோணம்:கோயம்புத்தூரில் இருந்து, சென்னை சென்ட்ரல் வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம், இரவு 11:00 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட, 'டி-10' பெட்டியில் பயணம் செய்த சென்னை சூளைமேடைச் சேர்ந்த வினோத், 29., என்பவர், ரயில் நின்று புறப்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.தண்டவாளத்தில் சிக்கியவரின் வலது கை துண்டான நிலையில், அருகே இருந்தவர்கள் மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாகனம் வாயிலாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை