உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தையுடன் பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாராட்டு

குழந்தையுடன் பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாராட்டு

குழந்தையுடன் பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாராட்டுசேலம் :சேலம் அரசு மகளிர் கலைக்கல்லுாரி, கணினி அறிவியல் துறை சார்பில், ஊரக பெண்களுக்கு, 5 நாள் கணினி பயிற்சி, கடந்த, 27ல் தொடங்கியது. இதில் கிராம பகுதிகளில் கணினி குறித்த அறிமுகம் இல்லாத பெண்களுக்கு, அடிப்படை கணினி திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் நிறைவு விழா நேற்று நடந்தது. அதில், 5 நாட்களும், 8 மாத கைக்குழந்தையுடன், பயிற்சியில் ஆர்வமாக பங்கேற்ற உதயராணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் காந்திமதி, துறைத்தலைவர் ஹேமகீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை