உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்புமேட்டூர், :கொளத்துார் அடுத்த, கோட்டையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று கூடுதல் வகுப்பறை கட்டடம் திறக்கப்பட்டது.கொளத்துார் ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சி, கோட்டையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் வளாகத்தில், சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, 17 லட்சம் ரூபாய் மதிப்பில். புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இதை மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, கொளத்துார் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் மாரப்பன் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை