மேலும் செய்திகள்
'கொடை'யில் திடீரென உருவான பனிமூட்டம்
08-Jan-2025
ஏற்காட்டில் அதிகாலையில் பனிமூட்டம், குளிரால் சிரமம்ஏற்காடு, : ஏற்காட்டில் சில மாதங்களாக பனிமூட்டதுடன் கடுங்குளிர் நிலவியது. சில நாட்களாக பருவ நிலை மாறி பகலில் வெயில் அடிக்க தொடங்கியது.இந்நிலையில் நேற்று அதிகாலை, ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து கடுங்குளிர் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். காலை, 8:30 மணிக்கு பின் பனிமூட்டம் விலகி, வெயில் அடிக்க தொடங்கியது. இதனால் குளிரும் குறைந்தது.மேலும் சனிக்கிழமையான நேற்று, சுற்றுலா பயணியர் குறைந்த அளவிலேயே தென்பட்டனர். படகு இல்லம், பூங்காக்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர்.
08-Jan-2025