உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நார் மில்லில் தீ விபத்துரூ.1 லட்சத்துக்கு சேதம்

நார் மில்லில் தீ விபத்துரூ.1 லட்சத்துக்கு சேதம்

நார் மில்லில் தீ விபத்துரூ.1 லட்சத்துக்கு சேதம்ஓமலுார்:கடையாம்பட்டி, குண்டுக்கல்லை சேர்ந்தவர் குமார், 37. அதே பகுதியில் நார் மில் நடத்துகிறார். அங்கு நேற்று மதியம், 2:45 மணிக்கு, திறந்தவெளியில் கொட்டப்பட்ட தேங்காய் நாரில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதை அறிந்து காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்தினர். விரைந்து செயல்பட்டதால் அங்குள்ள இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டன. இருப்பினும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் இருக்கும் என தெரியவந்தது. தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ