சிறுமிக்கு தொல்லைவாலிபருக்கு ஆயுள்
சிறுமிக்கு தொல்லைவாலிபருக்கு 'ஆயுள்'சேலம்:சேலம், மல்லுார், ஏரிக்கரையை சேர்ந்தவர் வசந்தகுமார், 27. இவர், 2021 பிப்ரவரியில், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அச்சிறுமி புகார்படி, மல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து, வசந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் வசந்தகுமாருக்கு ஆயுள் சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.