அனல்மின் நிலையத்தில்மின் உற்பத்தி நிறுத்தம்
அனல்மின் நிலையத்தில்மின் உற்பத்தி நிறுத்தம்மேட்டூ:மேட்டூரில், 600 மெகாவாட் புது அனல்மின் நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு கொதிகலன் குழாய் பழுது ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. பழுதை சரி செய்து, சில நாட்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என, அனல்மின் நிலைய பொறியாளர்கள் கூறினர்.