லஞ்சம் வாங்கி சிக்கியவி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
லஞ்சம் வாங்கி சிக்கியவி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'ஓமலுார்:ஓமலுார் அருகே செல்லப்பிள்ளைகுட்டையில் வாரிசு, பட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம், 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ., ரவிச்சந்திரன், கிராம உதவியாளர் பெருமாள் ஆகியோரை, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த, 2ல் கைது செய்தனர். இதனால் நேற்று, வி.ஏ.ஓ.,வை, மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். அதேபோல் கிராம உதவியாளர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து, ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார் உத்தரவிட்டார்.