வடமாநில தொழிலாளி மர்மச்சாவு
ஆத்துார், ஆத்துார், மஞ்சினி, புங்கவாடி சாலையில் நேற்று, மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தார். மக்கள் தகவல்படி ஆத்துார் ஊரக போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிலாஸ்பர், 31, என்பதும், கூலி வேலைக்கு ஆத்துாருக்கு சில நாட்களுக்கு முன் வந்ததும் தெரியவந்தது. இறப்பு குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.