உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஒரே மாதத்தில் 142 பேரின்லைசென்ஸ் தற்காலிக ரத்து

ஒரே மாதத்தில் 142 பேரின்லைசென்ஸ் தற்காலிக ரத்து

சேலம், டிச. 14-சேலம் மண்டல போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம்; ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் பகுதி நேர அலுவலகங்கள் செயல்படுகின்றன. கடந்த நவம்பரில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் குழுவினர், 11 அலுவலக பகுதிகளில், 7,622 வாகனங்களை சோதனை செய்தனர். அதில் சாலை விதிகளை மீறியவர்களில், 142 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிக ரத்து செய்யப்பட்டுள்ளன.அதில் அதிகபட்சம் மொபைல் போனில் பேசியபடி வாகன ஓட்டிய, 41 பேர், சிக்னலை தாண்டிய 40 பேர், அதிவேகத்தில் சென்ற, 33 பேர், அதிக பயணிகளை ஏற்றிய, 17 பேர், போதையில் வாகனம் ஓட்டிய, 7 பேர் உள்ளிட்டவை அடங்கும்.தவிர, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றியது, முகப்பு விளக்குகளை அதிக வெளிச்சத்துடன் ஒளிரவிட்டது, சீட் பெல்ட் அணியாதது, அதிக சத்தம் எழுப்பிய ேஹர்ஹாரன் என, பல்வகை விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு, 46.36 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில், 15.14 லட்சம் ரூபாய் உடனே வசூலிக்கப்பட்டது.மேலும், 19.16 லட்சம் ரூபாய் சாலை வரி வசூலானது. அத்துடன் தகுதிச்சான்று(எப்.சி.,), அனுமதி சீட்டு(பர்மிட்) இல்லாத, 136 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை