உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வார இறுதி நாளை முன்னிட்டு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி நாளை முன்னிட்டு 150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார இறுதி நாளை முன்னிட்டு150 சிறப்பு பஸ்கள் இயக்கம் சேலம், ஜன. 3--வார இறுதி நாட்களை முன்னிட்டு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், இன்று முதல் வரும், 6 வரை, 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், ‍பெங்களூரு; பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஓசூரில் இருந்து சேலம், சென்னை, கடலுார், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர்; நாமக்கல்லில் இருந்து சென்னை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூரு; திருச்சியில் இருந்து ஓசூர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணியர் வசதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், www.tnstc.inஎன்ற இணைய தளம் வழியே முன்பதிவு செய்யலாம் என, நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி