கொலை வழக்கில் மேலும் 3 பேருக்கு குண்டாஸ்
சேலம், சேலம், வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரை முன்விரோதம் காரணமாக, ஒரு கும்பல், கத்தியால் குத்தி கொலை செய்தது.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த இரும்பாலை போலீசார், 13 பேரை கைது செய்தனர். அவர்களில் காளியப்பன், தங்கராஜ், இளங்கோ, சூரியா, பிரகாஷ், கவினேஷ் ஆகியோரை கடந்த, 14ல் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். தொடர்ந்து வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த அன்பழகன், 21, பசுபதி, 19, ஜீவா, 21 ஆகியோரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.