உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளியிடம் 4 பவுன் பறிப்பு

தொழிலாளியிடம் 4 பவுன் பறிப்பு

தாரமங்கலம்:தாரமங்கலம், மேல் சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி சீனி, 39. இவர் வீடு வாசலில் நேற்று முன்தினம் இரவு கட்டிலில் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 2:00 மணிக்கு சீனி வீட்டின் ஜன்னல் மீதிருந்த மொபைல் போனை மர்ம நபர் திருடிக்கொண்டார். இந்நிலையில் சீனி எழுந்து திரும்பியபோது, அவர் அணிந்திருந்த, 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்து சீனி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை