கூடுதல் மேலாளர் பொறுப்பேற்பு
சேலம், சேலம் ரயில்வே கோட்ட, கூடுதல் மேலாளராக சிவலிங்கம் பணிபுரிந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு, திருச்சி பொன்மலை பணிமனை, பொறியியல் பிரிவில் பணியாற்றிய சரவணன் நியமிக்கப்பட்டார். அவர், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து கோட்ட மேலாளர் பன்னாலாலை சந்தித்து வாழ்த்து பெற்றார்.