மேலும் செய்திகள்
நாளை அ.தி.மு.க., கூட்டம் இ.பி.எஸ்., பங்கேற்பு
07-Nov-2025
ஓமலுார்:அ.தி.மு.க.,வின், 54ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, ஓமலுாரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில், பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேசுவதால், கட்சி நிர்வாகிகள்பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி அறிக்கை: அ.தி.மு.க.,வின், 54ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்டம் சார்பில், ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நவ., 8(இன்று) மாலை, 6:00 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலர், இ.பி.எஸ்., பேசுகிறார். அதில் அமைப்பு செயலர் செம்மலை உள்ளிட்ட மூத்த முன்னோடிகளும் பேசுகின்றனர். அதனால் இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
07-Nov-2025