ஜி.எஸ்.டி., வரம்புக்குள் டீசல் விலைக்கு கோரிக்கை
சேலம்:தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் சார்பில், 6வது மாநில மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். அதில் புது மோட்டார் வாகன சட்டத்தை அரசு திரும்ப பெறுதல்; தொழிலாளர் நல சட்டங்களை, 4 தொகுப்பாக மாற்றியதை கைவிடுதல்; பெட்ரோல், டீசல் விலைகளை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.துணைத்தலைவர் மூர்த்தி, பொதுச்செயலர் குப்புசாமி, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜ், மாவட்ட செயலர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.