தேர்தல் கமிஷனை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
சேலம், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி மேற்கொள்ளும் தேர்தல் கமிஷனை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.பி.,க்கள் செல்வகணபதி, சிவலிங்கம் தலைமை வகித்தனர். அதில் திரளானோர், தேர்தல் கமிஷனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து சிவலிங்கம் பேசுகையில், ''பா.ஜ.,வின் கைக்கூலியாக இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர் தீவிர திருத்தத்தை செயல்படுத்தியுள்ளது. தி.மு.க., இருக்கும் வரை, ஒருபோதும் இதை அனுமதிக்க மட்டோம்,'' என்றார். மேயர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் சுபாசு, காங்., வி.சி., கம்யூ., த.வா.க., முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.