விவசாயம் செழிக்க அன்னதானம்
வாழப்பாடி :வாழப்பாடி, மன்னாய்க்கன்பட்டி மேற்கு காட்டில் உள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று, மக்கள் இணைந்து, சிறப்பு அபிஷேகம், பூஜை செய்தனர். தொடர்ந்து பல்வேறு காய்கறியால் உருண்டை சோறு தயாரித்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இதனால் நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.