உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தபால் ஓய்வூதியருக்கு ஜூலை 2ல் குறைதீர் கூட்டம்

தபால் ஓய்வூதியருக்கு ஜூலை 2ல் குறைதீர் கூட்டம்

சேலம், சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:தபால் துறையில் ஓய்வு பெற்றோருக்கு, கோவை மண்டல குறைதீர் கூட்டம், ஜூலை, 2 காலை, 11:00 மணிக்கு, வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடக்க உள்ளது. ஓய்வூதியர்கள், வரும், 25க்குள், 'ரீஜனல் லெவல் பென்ஷன் அதாலத்' என குறிப்பிட்டு, தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் குறைககளை அனுப்ப வேண்டும். கோட்ட அளவில் தீர்க்க முடியாத குறைகளை மட்டும் குறிப்பிட வேண்டும்.வாரிசுரிமை உள்ளிட்ட சட்டப்பூர்வ பிரச்னைகள் எடுத்துக்கொள்ளப்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !