உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கணவர் தற்கொலையில் சந்தேகம் 2வது மனைவி புகாரால் விசாரணை

கணவர் தற்கொலையில் சந்தேகம் 2வது மனைவி புகாரால் விசாரணை

சேலம், சேலம், வீராணம், சுக்கம்பட்டியை சேர்ந்தவர் பெரிய மாரியப்பன், 78. இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். பெரிய மாரியப்பன், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள், போலீசுக்கு தெரிவிக்காமல், இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் பெரிய மாரியப்பனின் இரண்டாவது மனைவி, கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக, வீராணம் போலீசாரிடம் தெரிவித்தார். அதனால் உடலை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை