உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொடர் மழையால் நிரம்பி வரும் கஞ்சநாயக்கன்பட்டி வடம-னேரி

தொடர் மழையால் நிரம்பி வரும் கஞ்சநாயக்கன்பட்டி வடம-னேரி

ஓமலுார்: தொடர் மழை காரணமாக, வடமனேரிக்கு நீர்வரத்து அதிகரித்-துள்ளதால், பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.காடையாம்பட்டி தாலுகா, டேனிஷ்பேட்டை அடுத்துள்ள உள்-கோம்பையில், ஏற்காடு மலை அடிவாரத்தில், மேற்கு சரபங்கா ஆறு உற்பத்தியாகிறது. ஏற்காட்டில் பெய்து வரும் மழை காரண-மாக, மேற்கு சரபங்கா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் டேனிஷ்பேட்டை ஏரி, கோட்டைகுள்-ளமுடையான் ஏரி, பண்ணப்பட்டி ஏரி ஆகியவை நிரம்பியுள்ளது.தற்போது பண்ணப்பட்டி ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர், தாராபுரம் பஞ்.,க்குட்பட்ட கஞ்நாயக்கன்பட்டியில், 220 ஏக்கரில் உள்ள வடமனேரிக்கு செல்கிறது. மூன்று வாரங்களுக்கு மேலாக தண்ணீர் செல்வதால், ஏரி மெதுவாக நிரம்பி வருகிறது. ஏரி நிரம்-பினால் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும், விவசாத்துக்கும் இரண்-டாண்டுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது. வறண்டநிலையில் இருந்த ஏரிக்கு, தண்ணீர் வருவதால் பொதுமக்கள் ஏரியை ரசித்து பார்த்து செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை