உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழா தொடக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழா தொடக்கம்

சேலம், சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா, விஷ்வக்சேனர் பூஜை, புண்யாவாஜனம், வாஸ்து பூஜை, அங்குரார்பணம் ஆகியவற்றுடன், நேற்று மாலை தொடங்கியது. தொடர்ந்து கலைமாமணி அபர்ணா ரமேஷ் குழுவினரின், ஹரி நாம சங்கீத இசை கச்சேரி நடந்தது.இன்று, முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள், புதிதாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள தன்வந்திரி பகவான் சிலை ஜலாதிவாசம், சாயாதிவாசம் மற்றும் கண் திறப்பு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து மாலையில் அனந்தபத்மநாபாச்சாரியார், 'அத்திவரதரின் நான்கு யுக ரகசியம்' தலைப்பில் பேசுகிறார். நாளை, 3, 4ம் கால யாகசலை பூஜைகள், 17 கலச அபிேஷகம், அலங்கார பூஜைகள், மாலையில் அபர்ணா ரமேஷ் குழுவினரின் பரதநாட்டியம் நடக்க உள்ளது. வரும், 8 காலை, 5ம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. அன்று மாலை திருக்கல்யாண உற்சவம், சப்பரத்தில் திருவீதி உலாவுடன் கும்பாபிேஷக விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ