உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாலிபரை தாக்கியவர் கைது

வாலிபரை தாக்கியவர் கைது

சேலம்:சேலம், அன்னதானப்பட்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த், 33. இவர் கடந்த, 20ல் நண்பர்களுக்கு நீச்சல் பழகி கொடுக்க கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே உள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு வந்த சிலர், ஆனந்தின் நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். ூஅவர்களை ஆனந்த் எச்சரித்திருந்தார். இதனால் அன்று மாலை அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், கிணற்று பகுதியில் நடந்த தகராறு குறித்து, ஆனந்திடம் பேசி வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து அவரை, பீர் பாட்டிலால் தாக்கினர். படுகாயமடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, அன்னதானப்பட்டி, 4 ரோட்டை சேர்ந்த பிரேம்குமார், 27, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ