மேலும் செய்திகள்
1,478 கனஅடியாக நீர்வரத்து உயர்வு
23-Sep-2024
மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் வறட்சியால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், அங்குள்ள அணைகள் நிரம்பியது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர், காவிரியில் வந்ததால் கடந்த ஜூலை, 3ல், 39.65 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் ஜூலை, 30ல் முழு கொள்ளளவான, 120 அடியாக உயர்ந்தது.அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு, நீர் திறந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்தது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,478 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 1,386 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு, 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்திறப்பை விட வரத்து குறைவாக இருந்ததால் நேற்று முன்தினம், 103.64 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று, 102.37 அடியாக சரிந்தது.
23-Sep-2024