மேட்டூர் நீர் திறப்பு 35,000 கனஅடியாக உயர்வு
மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கர்நாடகா அணைகள் நிரம்பி உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, வினாடிக்கு, 28,000 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று இரவு, 8:00 மணிக்கு, 35,250 கனஅடியாக அதிகரித்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் இரவு, வினாடிக்கு, 27,500 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்திறப்பு, நேற்று இரவு, 35,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதில், 22,100 கனஅடி நீர் மின் நிலையங்கள் வழியாக பாசனத்துக்கும், 12,900 கனஅடி உபரி நீர், 16 கண் மதகு வழியே காவிரியிலும் வெளியேற்றப்பட்டது.