சிறுமியிடம் சில்மிஷம் செய்த பெயின்டர் கைது
ஓமலுார்:நங்கவள்ளி அருகே வனவாசியை சேர்ந்த, 15 வயது சிறுமி, வீட்டில் தனியே இருந்தபோது, பெரியவனவாசியை சேர்ந்த பெயின்டர் ரமேஷ், 27, சில்மிஷம் செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாய், கடந்த அக்., 29ல் ஓமலுார் மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணைக்கு பின், நேற்று போலீசார், 'போக்சோ' சட்டத்தில் ரமேைஷ கைது செய்தனர்.