உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்த போலீஸ்

டாஸ்மாக் சங்க நிர்வாகிகளை வீட்டு காவலில் வைத்த போலீஸ்

பனமரத்துப்பட்டி: தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர் நலச்சங்கம் உள்பட, 10 டாஸ்மாக் தொழிற்-சங்கங்க கூட்டமைப்பு சார்பில், பணி நிரந்தரம், அரசு பணியாளர்-களுக்கு இணையாக சம்பளம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சென்னையில், காத்திருப்பு தொடர் போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து, சேலத்தை சேர்ந்த, தமிழக அரசு டாஸ்மாக் பணி-யாளர் சங்க மாநில துணைத்தலைவர் முருகேசன் கூறியதாவது:சேலத்தில் இருந்து, 100 பேர் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தோம். ஆனால் இரவு, 8:00 மணிக்கு சென்னை புறப்பட்ட-போது, போலீசார் பிடித்து, கிச்சிப்பாளையம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். நள்ளிரவு, 1:00 மணிக்கு வீட்டில் விட்-டனர். ஆனால் வெளியே இரு போலீசாரை நிறுத்தி, போராட்-டத்தில் பங்கேற்க விடாமல் வீட்டு காவலில் வைத்தனர். நான் உள்பட, 5 நிர்வாகிகள் பாதிக்கப்பட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி