சாலையோரம் வசிப்போருக்கு போர்வை வழங்கல்
சேலம்; சேலம் மாநகர மாவட்ட த.மா.கா., சார்பில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி தலைமையில், சாலையோரம் வசிப்பவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. அதன்படி டவுன், அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையோரத்தில் உறங்கிய, 50க்கும் மேற்பட்டவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டன.