உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உர செயலாக்க மையத்தில் ஷாக் துாய்மை பணியாளர் படுகாயம்

உர செயலாக்க மையத்தில் ஷாக் துாய்மை பணியாளர் படுகாயம்

ஆத்துார், ஆத்துார் நகராட்சி பைத்துார் சாலையில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில், ஒப்பந்த துாய்மை பணியாளர் பழனியம்மாள், 41, நேற்று மதியம், 1:30 மணிக்கு, காய்கறி கழிவை இயந்திரத்தில் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்போது மின்சாரம் பாய்ந்ததில், அவரது வலது புற கையில் படுகாயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கூறுகையில், ''உர தயாரிப்பு மையங்களில் மின் ஒயர்கள் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ