உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரிசி ஏற்றிவந்த டாரஸ் லாரிகவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

அரிசி ஏற்றிவந்த டாரஸ் லாரிகவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

சேலம்:மஞ்சவாடி கணவாய் அருகே அரிசி ஏற்றி வந்த டாரஸ் லாரி கவிழ்ந்து, ௨ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அரியலுார், ஆண்டிமடத்தை சேர்ந்தவர் சதீஷ், 30. இவர், ஆந்திராவில், 25 டன் அரிசி மூட்டைகளை டாரஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு, கோவைக்கு செல்ல, நேற்று சேலம் வழியே வந்து கொண்டிருந்தார். காலை, 9:00 மணிக்கு, மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது, அதன் சாலை இறக்கத்தில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது. டிரைவர், லேசான காயத்துடன் தப்பினார். ஆனால் அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீராணம் போலீசார், அரிசி மூட்டைகளை, வேறு லாரியில் ஏற்றினர். தொடர்ந்து பொக்லைன் மூலம் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ