உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவியரிடம் சீண்டல்: ஆசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு

பள்ளி மாணவியரிடம் சீண்டல்: ஆசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு

ஆத்துார்: ஆத்துார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், பிளஸ் 2 வரை, 2,000க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அங்கு, 15 ஆண்டுகளுக்கு மேலாக, அறிவியல் பாட, பட்டதாரி ஆசிரிய-ராக ஜெகநாதன் ரெஜிஸ், 58, பணிபுரிந்தார். 2019 - 20ல், சில மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். இது-தொடர்பான புகாரில், அவரை, 2020ல், அப்போதைய சேலம் முதன்மை கல்வி அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.தொடர்ந்து அவர் மீதான புகார் குறித்து, விசாரணை குழு அமைத்து, மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலு-வலர் என, பல்வேறு கட்ட விசாரணைக்கு பின், பள்ளி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அவர் மீதான புகார் உறுதியானதால், கடந்த நவ., 28ல், ஜெகநாதன் ரெஜி-ஸூக்கு கட்டாய ஓய்வு வழங்கி, பள்ளி கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டார்.இதுகுறித்து சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறு-கையில், ''மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த புகாரில், ஜெகதநாதன்ரெஜிஸ், 2020ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதற்கு பின் அவர் பள்ளிக்கு வரவில்லை. தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு, குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூப-ணமானதால், ஜெகதநாதன்ரெஜிஸூக்கு தற்போது கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை