/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் கிங்ஸ்டன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் கிங்ஸ்டன் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வேலுார்: வேலுாரில், வி.ஐ.டி., பல்கலைக்கழகம், கிங்ஸ்டன் பள்ளி மற்றும் ஐடாஸ் கட்டர் ஆகிய மூன்று கல்வி நிலையங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. போலீசார் மோப்ப நாய் உத-வியுடன் சோதனை நடத்தியபோது, அது புரளி என தெரியவந்-தது. வேலுார் மாவட்டம், காட்பாடியிலுள்ள வி.ஐ.டி., பல்கலைக்க-ழகம், கிறிஸ்டியான் பேட்டையில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பள்ளி மற்றும் விருதம்பட்டு பகுதியிலுள்ள ஐடாஸ் கட்டர் பள்ளி ஆகிய, 3 கல்வி நிறுவனங்களுக்கு, வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று இ-மெயிலில் மிரட்டல் வந்தது. புகார் படி, காட்பாடி போலீசார், அந்த இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்திய-போது, வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்-தது. மிரட்டல் விடுத்த நபர் யாரென, போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.