அஸ்தம்பட்டி மண்டலத்தில் இன்று குடிநீர் கட்
சேலம், சேலம், சாரதா கல்லுாரி அருகே, 3 இடங்களில், 1.100 மீ., விட்டமுள்ள ஆர்.சி.சி., பிரதான குடிநீர் பம்பிங் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், அஸ்தம்பட்டி மண்டல பகுதி, அம்மாபேட்டை மண்டலத்தில் புத்துமாரியம்மன் கோவில், வாய்க்கால்பட்டறை பகுதிகளில், இன்று மட்டும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.