உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தரமற்ற ரேஷன் பொருள் இன்று புகார் செய்யலாம்

தரமற்ற ரேஷன் பொருள் இன்று புகார் செய்யலாம்

சேலம், சேலம் மாவட்டத்தில் உள்ள, 14 தாலுகா அலுவலகத்திலும் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், இன்று நடக்கிறது.இதில் வட்ட வழங்கல் அலுவலரிடம், நுகர்வோர் புகார் தெரிவித்து தீர்வு பெறலாம்.ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புது கார்டு, நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மொபைல் எண் பதிவு, மொபைல் எண் மாற்றம் தொடர்பான மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். தவிர பொது வினியோக கடைகளின் செயல்பாடு, அத்யாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் இருப்பின் தெரிவிக்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை