உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடியில் அகழாய்வு தகவல்களை தொல்லியல் துறை மறைக்கிறதா

கீழடியில் அகழாய்வு தகவல்களை தொல்லியல் துறை மறைக்கிறதா

கீழடி: கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு நடந்து வரும் நிலையில் பணிகள் குறித்த தகவல்களை தொல்லியல் துறை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கீழடியில் தமிழக தொல்லியல் துறை இதுவரை ஐந்து கட்ட அகழாய்வை நடத்தி முடித்துள்ளது. அகழாய்வு பணிகள் ஜனவரியில் தொடங்கி செப்டம்பர் வரை நடைபெறும், அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை தொல்லியல் துறை எடுத்த இடத்திலேயே பத்திரிக்கையாளர்கள், அகழாய்வு பணிகளை பார்வையிட வரும் தொல்லியல் துறை வல்லுனர்கள் உள்ளிட்டோரிடம் காண்பிப்பது வழக்கம்.இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை பார்வையிட கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் அரசு சார்பாகவே தொல்லியல் துறை வல்லுனர்கள் வந்து பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். கடந்த கால கட்டங்களில் 15 குழிகள் வரை தோண்டப்பட்டு பெரிய அளவில் அகழாய்வு நடந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக அகழாய்வு பெயரளவில் நடப்பதுடன் ஏழு முதல் ஒன்பது குழிகள் வரையே தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதிலும் பத்தாம் கட்ட அகழாய்வில் பொருட்கள் கிடைத்ததா என்பதே சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. தமிழகம் முழுவதும் விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் அகழாய்வில் பொருட்கள் குறித்து தொல்லியல் அதிகாரிகளே விளக்கமளிக்கின்றனர். ஆனால் கீழடியில் பொருட்கள் குறித்து யாருமே விளக்கமளிப்பதில்லை. தற்போது அகழாய்வு நடந்து வரும் இடத்தின் அருகே சிவப்பு நிற பானை கிடைத்த நிலையில் தற்போதும் அதே போன்ற பானை கிடைத்தது, ஆனால் அதனை அகழாய்வு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சேதப்படுத்தி விட்டனர்.செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டு பத்து நாட்களுக்கு மேலாகியும் அதுகுறித்த எந்த தகவலையும் தொல்லியல் துறை வெளியிடவே இல்லை.வரும் 10ம் தேதி கீழடி வர உள்ள அமைச்சர் உதயநிதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ