தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டம்
சிவகங்கை : சிவகங்கையில் நகர், வடக்கு, தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள்முத்துராமலிங்கம், ஜெயராமன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராமநாதன், அயூப்கான், துபாய்காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.