கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் நாளை கும்பாபிேஷகம்
சிவகங்கை: கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் இரண்டாம், மூன்றாம் கால வேள்வியுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் புனரமைக்கப்பட்டது. இக்கோயிலில் நாளை கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. செப்.,4ல் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் தொடங்கின. புனித தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வருதல், கும்ப அலங்காரம், திரவியாகுதி, மகாபூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்கியது. மங்கள இசை, திருமுறை, பாராயணம், பாவனாபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகளும், அததை தொடர்ந்து மங்கள இசை, திருமுறை, பாராயணங்கள் பாடப்பட்டன. இரவு 8:15 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. செப்.,7 இன்று காலை 8:35 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி துவங்கும். செப்., 8 அன்று காலை 6:15 மணிக்கு ஆறாம் கால வேள்வியுடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகிறது. அன்றைய தினம் மண்டப சாந்தி, நாடி சந்தனம், கோபூஜை நடைபெறும்.காலை 10:45 முதல் 11:45 மணிக்குள் கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி, கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர். அன்று மாலை 6:15 மணிக்கு வெட்டுடைய காளியம்மன் தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வருவார். கோயில் தக்கார் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.