மூலிகை சாகுபடி பயிற்சி
காரைக்குடி: செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய மூலிகை தாவர வாரியம் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் விவசாயிகளுக்கு அஸ்வகந்தா மூலிகை சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.மானாவாரி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஜூடு சுதாகர் வரவேற்றார். பேராசிரியர் பாபு, ஆயுஸ் அமைச்சக தேசிய மூலிகை தாவர வாரிய தென் மண்டல திட்ட இயக்குனர் சாக்கோ, உணவு வள அலுவலர் செந்தில்குமரன், உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து பேராசிரியை கமலசுந்தரி பேசினர். கேரள வன ஆராய்ச்சி நிறுவன ஆலோசகர் உதயன் நன்றி கூறினார்.