உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் ஆருத்ரா தரிசனம்

தேவகோட்டையில் ஆருத்ரா தரிசனம்

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஒரு வாரம் கோவிலில் உள்ள நடராஜருக்கும், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் கோ பூஜை நடைபெற்றது. சிறப்பு ஹோமத்தை தொடர்ந்து நடராஜருக்கும் , சிவகாமி அம்மனுக்கும், மாணிக்கவாசகருக்கும் பூஜைகள் நடைபெற்றன. 11 ஆயிரம் ருத்ராட்சத்தால் ஆன கேடகத்தில் நடராஜரும், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகர் திருவீதி உலா வந்தனர். * நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவிலில் கோ பூஜை, ருத்ர சமுக்க ஹோமம் பாராயணம் பாடி சிதம்பரேஸ்வரர் சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகருக்கு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ