சட்டசபை உறுதி மொழி குழு ஆக.11ல் ஆய்வு ஆக.,11 ல் சிவகங்கையில் ஆய்வு
சிவகங்கை : சிவகங்கையில் சட்டசபை உறுதி மொழி குழுவினர் ஆக.,11 அன்று அரசு திட்டபணிகளை ஆய்வு செய்ய உள்ளனர். தமிழக சட்டசபை உறுதி மொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள், சட்டசபை செயலர் உள்ளிட்டோர் ஆக.,11 அன்று காலை 10:00 மணிக்கு மாவட்ட அளவில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட உள்ளனர். அதனை தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பொற்கொடி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இக்குழுவினர் ஆய்வின் போது கண்டறியப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர்.