காரைக்குடியில் பர்னிச்சர் கண்காட்சி
காரைக்குடி; காரைக்குடி செக்காலை ரோட்டில் அமைந்துள்ள சுபலட்சுமி மஹாலில் பர்னிச்சர் எக்ஸ்போ 2025 நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறுகையில்: இங்கு ஏராளமான பர்னிச்சர்கள் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கைதேர்ந்த கலைஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நிலம்பூர் டீக் உட் சோபா, டில்லி குஷன் சோபா, திவான் தேக்கு மர கட்டில், டைனிங் டேபிள், டீ பாய், மர ஊஞ்சல்கள், ஈசி சேர் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்கள் கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வீடு அலுவலகங்களுக்கு ஏற்றார் போல் கலர், அளவு, விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து தருவது இக்கண்காட்சியின் சிறப்பு. இக்கண்காட்சி, ஆக.-3 வரை நடைபெறும். தொடர்புக்கு: 99528 99865