உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 63 நாயன்மார்களுக்கு குரு பூஜை

63 நாயன்மார்களுக்கு குரு பூஜை

திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று காலை 9:30 மணிக்கு நடராஜர் சன்னதி முன்பாக யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள் துவக்கினர். தொடர்ந்து காலை 10:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்து 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பொன்னம்பல அடிகள் முன்னிலையில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர் பிரகார வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ