காரைக்குடியில் இஸ்கான் ரதயாத்திரை
காரைக்குடி : காரைக்குடியில் நடந்த இஸ்கான் ரதயாத்திரையில் ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர்.உலக நன்மைக்காகவும்,பகவத் கீதை மற்றும் ஹரே கிருஷ்ணா மந்திரத்தை மக்களிடம் பரப்பவும் இஸ்கான் என்ற அமைப்பு தமிழகம் முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டுள்ளது. குஜராத் காளைகள் பூட்டிய ரதத்தில், கிருஷ்ணரும் பலராமரும் அமர்ந்த நிலையிலான சிலைகள் உள்ளது.திருநெல்வேலியில் தொடங்கி தமிழகம் முழுவதும் இந்த யாத்திரை நடைபெறுகிறது. காரைக்குடி வந்த யாத்திரை குழு, காரைக்குடி இஸ்கான் அமைப்புடன் இணைந்து ரத ஊர்வலம் நடத்தினர்.