உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் முக்கிய திருவிழாவான பால்குட விழாவை முன்னிட்டு நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் தீமிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மார்ச் 11ல் கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. நேற்று முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் பக்தர்கள் அலகு குத்தியும் தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் கரகம் பருப்பூரணியில் சேர்க்கும் நிகழ்ச்சியும், இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று, இரவு அம்மன் திருவீதி உலாவும் 21ம் தேதி சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் விஸ்வநாத், கணக்கர் சரவணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை