மேலும் செய்திகள்
சிவன்மலை கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
14-Dec-2024
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.குன்றக்குடி கோயில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சந்தன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பள்ளிகள் விடுமுறை என்பதால் காரைக்குடி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகாலை முதலே வந்து தரிசனம் செய்தனர். கோயில் அடிவாரத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.மாலையில், மலை உச்சியில் இருந்து சுவாமி கீழிறங்கி கார்த்திகை மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன பூஜை மடத்தில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து கார்த்திகை மடத்தில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இரவு சுவாமி வீதி உலா நடந்தது.மானாமதுரை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றன. இரவு கோயில் முன் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.* மானாமதுரை வழி விடும் முருகன் கோயில், அங்காள பரமேஸ்வரி கோயில், சங்கு பிள்ளையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. *இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோயில் முன்பாக சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயில் மற்றும முருகன் கோயில்களிலும் திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
14-Dec-2024