மாணவருக்கு பாராட்டு
தேவகோட்டை முதலமைச்சர் கோப்பைக்கான மாநில தடகள போட்டி சென்னையில் நடக்கிறது.உயரம் தாண்டுதல் போட்டியில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி மாணவர் திஸ்வா இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கம் ரொக்க பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவர் திஷ்வாவை பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா, தாளாளர், தலைமையாசிரியர் சேவியர்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.