நாட்டார்கள் காவடிக்கு வரவேற்பு
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இருந்து தைப்பூசத்தை முன்னிட்டு ரத்தினவேல் அனைத்து நாட்டார்கள் காவடி பிப். 3ம் தேதி புறப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி தலைமையில் 151 காவடிகளை பக்தர்கள் பாதயாத்திரையாக எடுத்து வந்தனர்.நேற்று மருதிப்பட்டி கிராமத்தில் காவடிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ரத்தினவேலுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து சதுர்வேதமங்கலம் வழியாக சிங்கம்புணரி வந்த காவடிக்கு அப்பகுதியிலும் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.