முதல்வர் கோப்பை ஒற்றையர் இறகுபந்து காரைக்குடிக்கு வெள்ளி
சிவகங்கை: முதல்வர் கோப்பை ஒற்றையர் இறகுபந்து போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி மாநில அளவில் வெள்ளி பதக்கம் பெற்றார்.முதல்வர் கோப்பை ஒற்றையர் இறகுபந்து மாநில போட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடி பள்ளியை சேர்ந்த மாணவி ராஜராஜேஸ்வரி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று, வெள்ளி பதக்கம், சான்று, ரூ.75,000 பரிசு தொகை பெற்றார். சிவகங்கை மாவட்ட இறகுபந்து கழக தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் டி.எஸ்.பாரூக், பள்ளி தாளாளர் ஆர்.கே.,சேதுராமன், நிர்வாக இயக்குனர் எஸ்.அஜய்யுக்தேஷ், பயிற்சியாளர்கள் வீரபாண்டி, மணிஅழகு பாராட்டினர்.